1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 3வது உலக கோப்பையில் இந்திய அணி ஆல்ரவுண்டர் கபில்தேவ் தலைமையில் களம் இறங்கியது. பி பிரிவில் லீக் சுற்றில் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசுடன் மோதிய இந்தியா, 34 ரன் வித்தியாசத்தில் வென்றது. 2வது போட்டியில் ஜிம்பாப்வேவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 162 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 2வது முறையாக வெஸ்ட்இண்டீசிடம் 66 ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் ஜிம்பாப்வேயை 31 ரன் வித்தியாசத்தில் மீண்டும் வென்றது. லீக் சுற்றில் கடைசி போட்டியில் 118 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. லீக் சுற்றில் 6 போட்டியில் 4 வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளியுடன் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
The post உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 44 நாள்… appeared first on Dinakaran.